பெய்ரூட்டும் காஸாவாக மாறும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
Jun 15, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெய்ரூட்டும் காஸாவாக மாறும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெய்ரூட்டும் காஸாவாக மாறும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் வடக்கு காஸா நகரமே உருக்குலைந்து விட்டது. ஹமாஸ் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட 16,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போர் பிராந்தியப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் தலையிடவில்லை. இந்த சூழலில்தான், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் லெபனானுக்கும் ஏற்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், “ஹிஸ்புல்லா முழு அளவில் போரைத் தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காஸாவாகவும், தெற்கு லெபனானை கான்யூனிஸ் நகராகவும் மாற்றும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, ஹமாஸ் – இஸ்ரேல் போரைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

மேலும், காஸாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து நெதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெகன்யாகு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Tags: WARIsraelHamasPM Netanyagu
ShareTweetSendShare
Previous Post

களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்! – அண்ணாமலை

Next Post

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies