ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இரு நாட்டு வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் திரில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி கேப்டன் ஷிக்கந்தர் ராசா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர் ஜாஸ் லிட்டில் மற்றும் கோர்டீஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டு உள்ளார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஷிக்கந்தர் ராசா தன்னுடைய பொறுமையை இழந்து பேட்டால் அயர்லாந்து வீரர்களை அடிக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த நடுவர் சிக்கந்தர் ராசாவை தடுத்து அழைத்துச் சென்றார்.
சிக்கந்தர் ராசாவின் இந்த செயலால் கடுப்பான மற்றொரு அயர்லாந்து வீரர் சிக்கந்தர் ராசா வை அடிக்க சென்றார். அப்போது மற்றொரு நடுவர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஐசிசி நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் சிக்கந்தர் ராசாவுக்கு 50 சதவீதம் போட்டியிலிருந்து ஊதியத்தை அபராதமாக விதித்த நடுவர்கள் அவர் இரண்டு டி20 போட்டியில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். இதே போல் அயர்லாந்து வீரர்கள் கேம்பர் மற்றும் ஜாஸ் லிட்டில் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.
தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள சிக்கந்தர் ராசா ஐசிசி விதித்துள்ள இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிக்கந்தர் ராசா தான் ரன் அடிக்க ஓடும்போது ஜாஸ் லிட்டில் அதனைத் தடுத்து என்னை அவுட் ஆக்க முயன்றதாகக் கூறினார். சிக்கந்தர் ராசாவுக்குத் தடை, ஆனால் அயர்லாந்து வீரர்களுக்கு வெறும் 15 சதவீதம் மட்டும்தான் அபராதமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.