நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!
Sep 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பணியாளர்கள் 8 பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று முற்பகல் நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் அரங்கத்தில் இருந்த 2 பேர் திடீரென, மக்களவைக்குள் குதித்தனர்.

இருவரும் சர்வாதிகாரம் கூடாது என்று கத்தியபடியே, அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி ஓடினர். இருவரையும் மக்களவையில் இருந்த எம்.பி.க்கள் திரண்டு பிடித்தனர். அப்போது, இருவரும் கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியது. இதனால், அவையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து, பிடிபட்ட இருவரும் அவைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா என்பதும், மற்றொருவர் கா்நாடகாவின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் என்பதும் தெரியவந்தது.

அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று கோஷமிட்டவாறு மஞ்சள் நிற புகைக் குண்டுகளை வீசிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்த ஆண் மகாராஷ்டிராவைச் சோ்ந்த அமோல் ஷிண்டே என்பதும், அப்பெண் ஹரியானாவைச் சோ்ந்த நீலம் தேவி என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த இந்த அத்துமீறலுக்கு பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்பதால், பணியாளர்கள் ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய 8 பேரை மக்களவை செயலகம் இன்று சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

Tags: Parliamentsuspendsecurity breach8 personnel
Share
Tweet
SendShare
Previous Post

ரூ. 31 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி!

Next Post

மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் பலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies