தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!
Sep 2, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 11:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், தூத்துக்குடியில் இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. இரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் விரைவு இரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் இரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செல்லும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: Indian Railwaytrain
Share
Tweet
SendShare
Previous Post

திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்! – பிரதமர் மோடி

Next Post

5000 லட்சம் கோடியில் ஒரு சிறு பகுதிதான் பொன்முடியிடம் சிக்கியது!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies