தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!
Jul 16, 2026, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.

நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும், இரயில் தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், தூத்துக்குடியில் இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. இரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் விரைவு இரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் இரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செல்லும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: Indian Railwaytrain
ShareTweetSendShare
Previous Post

திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும்! – பிரதமர் மோடி

Next Post

5000 லட்சம் கோடியில் ஒரு சிறு பகுதிதான் பொன்முடியிடம் சிக்கியது!

Related News

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் கூடுதலாக 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேற்றம்!

நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies