அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஆக்ரோஷமாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இப்போரில், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், செங்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இவர்கள் ஏவிய 2 ஏவுகணைகளையும் அமெரிக்க போர்க் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் வழிமறித்து தாக்கி அழித்தது.

இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏறி கடத்துவதற்காக 4 படகுகளில் சென்றனர். இதையறிந்த அமெரிக்க கப்பற்படை ஹெலிகாப்டர், அப்படகுகளை துரத்திச் சென்று தாக்கியது.

இவற்றில் 3 படகுகள் அழிக்கப்பட்டன. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. எனினும் 3 படகுகளில் வந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதை ஹௌதி கிளர்ச்சியாளர்களே அறிவித்திருக்கிறார்கள். மேலும், இதற்கான விளைவை அனுபவிப்பீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க் கப்பலை செங்கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும் வழிமறித்து தாக்கி அழித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: americakilled10 HouthiRebels
Share
Tweet
SendShare
Previous Post

வாட்ஸ்அப் போன்ற அம்சத்தைப் பெறும் கூகுள் மேப்ஸ்.

Next Post

இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா : குஜராத்தில் தொடங்க உள்ளது !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies