அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!
Apr 30, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஆக்ரோஷமாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இப்போரில், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், செங்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இவர்கள் ஏவிய 2 ஏவுகணைகளையும் அமெரிக்க போர்க் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் வழிமறித்து தாக்கி அழித்தது.

இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏறி கடத்துவதற்காக 4 படகுகளில் சென்றனர். இதையறிந்த அமெரிக்க கப்பற்படை ஹெலிகாப்டர், அப்படகுகளை துரத்திச் சென்று தாக்கியது.

இவற்றில் 3 படகுகள் அழிக்கப்பட்டன. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. எனினும் 3 படகுகளில் வந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதை ஹௌதி கிளர்ச்சியாளர்களே அறிவித்திருக்கிறார்கள். மேலும், இதற்கான விளைவை அனுபவிப்பீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க் கப்பலை செங்கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும் வழிமறித்து தாக்கி அழித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: americakilled10 HouthiRebels
ShareTweetSendShare
Previous Post

வாட்ஸ்அப் போன்ற அம்சத்தைப் பெறும் கூகுள் மேப்ஸ்.

Next Post

இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா : குஜராத்தில் தொடங்க உள்ளது !

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies