வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை!
Jun 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது -எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது என எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆராய்ச்சியின் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் வருவாய் ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிகரிக்கும் வருவாய், இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஏற்றம் ஆகியவற்றின் மூலம் மேல்நோக்கிச் செல்கிறது.

2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டில் 70 மில்லியனில் இருந்து 2022-23-ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 74 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை கூறுகிறது.

2013-14, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல் 295% அதிகரித்துள்ளது, இது மொத்த வருமானத்தின் அதிக வரம்பிற்கு இடம்பெயர்வதற்கான சாதகமான போக்கைக் காட்டுகிறது என்று எஸ்பிஐ அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் தாக்கல் செய்த வருமானவரி கணக்குத் தாக்கல்கள் எண்ணிக்கையும் இதே காலகட்டத்தில் சுமார் 3 மடங்கு (291%) அதிகரித்துள்ளது.

ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் முதன்மையான 2.5% வரி செலுத்துவோரின் பங்கு 2013-14-ம் ஆண்டில் 2.81 சதவீதத்திலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 2.28 சதவீதமாக குறைந்துள்ளது.

“2014-ம் நிதியாண்டில் மிகக் குறைந்த வருவாய் ஈட்டும் தனிநபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்பவர்களில் 36.3 சதவீதம் பேர் மிகக் குறைந்த வருமான வரம்பை விட்டு வெளியேறி மேல்நோக்கி நகர்ந்துள்ளனர்.

இதன் விளைவாக 2014-2021 நிதியாண்டில் அத்தகைய நபர்களுக்கு 21.1 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பெண் தொழிலாளர் பங்கேற்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமான நிலைகளில் காணக்கூடிய சிறப்பம்சங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு பதிலாக நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்களின் அதிகரித்த விற்பனை போன்ற  கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு மாறிவரும் நுகர்வு முறை ஆகியவை இந்தியாவின் வலுவான பொருளாதார மீட்சியை குறிப்பிட்டுக் காட்டுவதாக எஸ்பிஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

Tags: SBISBI bankIncome inequality fallsgrowth rises - SBI Research Report!
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநரை சந்தித்த மத்திய அமைச்சர்!

Next Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேரடி ஒளிபரப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies