மேயர் தலை தப்புமா - நெல்லை பக்..பக்..!
Apr 29, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேயர் தலை தப்புமா – நெல்லை பக்..பக்..!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே கவுன்சிலர்களாக உள்ளனர். இதில், ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு அணியினர் எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால், திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், அவ்வப்போது மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

மேலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை கடந்த மூன்று மாதங்களுக்கு சென்னையில் நேரில் சந்தித்த கவுன்சிலர்கள், புகார் தெரிவித்தனர். அப்போது, சமாதானம் செய்து வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நேரு.

இருப்பினும், திமுக தலைமைக்கு புகார்கள் குவிந்தன. இதனால், மேயர் சரவணனிடம் மீதான புகார்களுக்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. மேலும், அவரிடம் ராஜினாமா கடிதமும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது 12-ம் தேதி காலை 11 மணி அளவில் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில், பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வெளியூர் அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் செல்கின்றனர். இதில், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் அடக்கம். கவுன்சிலர்கள் மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஒரு தரப்பு தகவலை பரப்பி வருகின்றனர். மேலும், கவுன்சிலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு குரூப் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதால், விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Mayortirunelveli
ShareTweetSendShare
Previous Post

விமானம் புறப்படும் போது குதித்த நபர் : பயணிகள் அதிர்ச்சி!

Next Post

அண்ணாமலை மீது வழக்கு – நாராயணன் திருப்பதி கண்டனம்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies