அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!
Apr 29, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. மேலும் இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது.

இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சிலை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ராமர் சிலை கொண்டு வர ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்ற போது “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களுக்கு மத்தியில் சிலை உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது.

10 டன் எடையும், 6 அடி அகலமும், 4 அடி தடிமனும், கிட்டத்தட்ட ஒரு அடி நீளமும் கொண்ட இந்த கல், கார்கலாவில் உள்ள நெல்லிக்கரு கிராமத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு முன்பு சிறப்பாக கொண்டு வரப்பட்டது.

மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கிய 51 அங்குல உயரமான சிலை, அயோத்தி கோயில் அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அருண், சிலையில் ஐந்து வயது குழந்தையான ராமர், தாமரையின் மீது ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். அதுமட்டுமின்றி, இந்தச் சிலை சிறந்த சிற்பங்கள் மற்றும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. 51 அங்குல உயரம் கொண்ட இந்த சிலையில் ராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இது எப்போதும் செய்யக்கூடிய மிகச் சிறந்த வேலை” எனத் தெரிவித்தார்.

தற்போது, கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிலை இன்று நிறுவப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் குழந்தை ராமர் சிலைக்கு சிறப்பு சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இன்று குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து, கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறகிறது.

குழந்தை வடிவிலான ராமர் சிலை சன்னதிக்குள் நுழைந்த நிலையில் நாளை அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 20 ஆம் தேதி, ராமர் கோயில் வளாகத்தில் சர்க்கரை, பழம் மற்றும் பூக்களை கொண்டு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து, இந்நாளில் கோயிலில் பல்வேறு நதிகளின் நீரால் சுத்திகரிக்கப்படும். மேலும், கோயிலின் கருவறையை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.

தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி125 கலசங்களில் உள்ள புனித தீர்த்தங்களை கொண்டு குழந்தை ராமர் சிலை சுத்தம் செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லாவின் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, குழந்தை ராமர் சிலையின் கண்கட்டு அவிழ்க்கப்படும்.

காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.  இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவ சிலையை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன.

Tags: Ayothi ramar temple
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டபுள் சூப்பர் ஓவர்!

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies