சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!
Jul 28, 2026, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து ராய்ப்பூரில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல், உளவுத்துறை (ஐபி) இயக்குநர் மற்றும் சி.ஆர்.பி.எஃப். இயக்குநர் ஜெனரல் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். தொடர்ந்து, கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அமித்ஷா, “ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகிய 3 உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றன. வன்முறைகள் சுமார் 75% குறைந்துள்ளன.

அதேபோல, இடதுசாரி தீவிரவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள புவியியல் பகுதியும் சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட புவியியல் பகுதிகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து இந்தப் பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை முழுமையாகப் பெற வேண்டியது அவசியம்.

பாதுகாப்புப் படைகளின் முகாம்களைப் பயன்படுத்தி, இத்திட்டங்களின் பலன்களை அருகிலுள்ள கிராமங்களுக்கும் விரிவுபடுத்தலாம். சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் பயன்பாடு ஆகிய இரண்டிலும் உள்துறை அமைச்சகம் நெகிழ்வாக இருக்க வேண்டும்.

மேலும், இடதுசாரி தீவிரவாதத்தை நிலைநிறுத்தும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் குறிவைக்க, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் விரிவான சாலை வரைபடத்தை தயாரிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

Tags: reviewsAmit ShahChhattisgarhleft wing extremismUnion Ministerhigh-level meeting
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Next Post

பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது!- அண்ணாமலை

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies