பீகார் அரசியலில் தொடரும் பரபரப்பு: அமித்ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான்!
Jul 31, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் அரசியலில் தொடரும் பரபரப்பு: அமித்ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 10:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதீஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கி இருக்கிறது. லாலுவின் மகன்கள் இருவரில் ஒரு துணை முதல்வராகவும், மற்றொருவர் அமைச்சராகவும் இருக்க, மகள் எம்.பி.யாக இருந்து வருகிறார்.

இதை சுட்டிக்காட்டும் வகையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதீஷ்குமார் கூறினார். உடனே, லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதீஷ்குமாரை வறுத்தெடுத்தார். இது இரு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக, நிதீஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், நாளை காலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், தொடர்ந்து மாலையில் பா.ஜ.க. ஆதரவுடன் பதவியேற்கப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இப்படி பீகார் அரசியலில் அனல் தெறிக்கும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரதானக் கட்சிகளில் ஒன்றான ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், இன்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், “இன்று பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அறிவது முக்கியம் . இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் நான் இன்று ஒரு சந்திப்பை நடத்தினேன்.

அப்போது, பீகார் தொடர்பான எனது கவலைகளை அவர்கள் முன் வைத்துள்ளேன். பல்வேறு விவகாரங்களில் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். கூட்டணி குறித்து மிகவும் சாதகமான சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் நிலைமை மேலும் தெளிவாகும். அதன் பிறகு, எங்கள் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். இன்று நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பீகார் எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான விஜய் குமார் சின்ஹா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பா.ஜ.க. எம்.பி.யும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், பா.ஜ.க. பீகார் மாநிலத் தலைவர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் இன்று பாட்னாவில் உள்ள பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் இல்லத்திற்கு வந்தார். மேலும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இல்லத்துக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சியின் தலைவர்கள் பலர் வந்தனர்.

விஜய் குமார் மண்டல், லலித் குமார் யாதவ், அப்துல் பாரி சித்திக், பீகார் சட்ட அமைச்சர் ஷமிம் அகமது மற்றும் பினோத் ஜெய்ஸ்வால் ஆகியோர் பாட்னாவில் உள்ள பீகார் துணை முதல்வரின் இல்லத்திற்குச் சென்றனர்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “காங்கிரஸின் பொறுப்பற்ற மற்றும் பிடிவாதமான அணுகுமுறையால் இண்டி கூட்டணி உடையும் நிலையில் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் பீகாரில் இண்டி கூட்டணி உடைவது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது.

Tags: Amit ShahmetBiharpolitical issueChirak Paswan
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை! :ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்.

Next Post

விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் 3 மடங்கு உயர்வு : அனுராக் தாக்கூர்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies