1,000 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Jun 13, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,000 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில், சர்வதேச கலாச்சார ஆய்வுகள் மையம் சார்பில், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் தொடர்பான 8-வது முப்பெரும் மாநாடு மற்றும் பெரியோர்களின் கூட்டம் ஷிக்ஷா பள்ளத்தாக்கு பள்ளியில் தொடங்கியது.

கூட்டத்துக்கு, அஸ்ஸாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் டாக்டர் மோகன் பகவத் ஆகியோர் தலைமை வகித்தனர். சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஆன்மீகத் தலைவர்கள் உலக அமைதி மற்றும் செழிப்புக்காக கூட்டாக பணியாற்றுவதற்கான வழிகள் மற்றும் வழிவகைகள் குறித்து ஆலோசிப்பார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, “உலகெங்கிலும் உள்ள பழமையான நம்பிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை சிதைக்கும் முயற்சிகளை தடுப்பது எங்கள் கூட்டு தீர்மானம்.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுக்கு விரோதமான சில சக்திகள், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அத்தகைய சக்திகளை முறியடிக்க நாட்டு மக்கள் பாடுபட வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள ஆன்மீகத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வது அனைவரும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் மதிப்புகளின் அடிப்படையில் சமூக பிணைப்பை வலுப்படுத்துங்கள்.

தற்போதைய சகாப்தம் பூர்வீக மரபுகள் மற்றும் நம்பிக்கைகளில் எதிர்மறையான உலகளாவிய தாக்கத்தால் குறிக்கப்படுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, பழங்குடி நம்பிக்கைகளில் பொதிந்துள்ள ஞானத்தின் மீது ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நிலையான எதிர்காலத்திற்காக இந்த நம்பிக்கைகளைப் பாதுகாத்தல் மற்றும் பரப்புவதற்கான ஒரு போக்கை உருவாக்க வேண்டும். இந்தியாவில் முக்கிய மதங்களுக்கு மேலதிகமாக, தேசத்தின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் பல பழங்குடி நம்பிக்கைகள் செழித்து வளர்ந்தன.

இந்தியாவில் உள்ள பூர்வீக நம்பிக்கைகள் வெறும் மத நடைமுறைகள் அல்ல. அவை ஞானத்தின் களஞ்சியங்கள். அவை சமூகங்களுக்கும் இயற்கை உலகிற்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இந்த நம்பிக்கை அமைப்புகளைப் பாதுகாப்பது மதத்தில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும். இந்த பூர்வீக நம்பிக்கைகள் வெவ்வேறு சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மூலம் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன” என்றார்.

சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் எத்தனையோ நவீனங்கள் நிகழ்ந்த போதிலும், போர்கள் மட்டும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. சமூக அளவிலும், தனிநபர்களிடமும் அகம்பாவமும், குறுகிய மனப்பான்மையும் மேலோங்கி உள்ளது.

அத்தகைய போக்குகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், தங்களுக்கென்று மற்றொரு குழுவை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கான நீடித்த தீர்வை கண்டறிவதில் மதங்கள் தோல்வியடைந்துள்ளன. உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்தபோதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம்” என்றார்.

கூட்டத்தில், சர்வதேச கலாச்சார ஆய்வு மையத்தின் தலைவர் சஷிபாலா, முதியோர்களின் ஆன்மீகத் தலைவர் லிதுவேனியா இனிஜா டெயின்குனே , குவாத்தமாலாவின் ஆன்மீகத் தலைவர் எலிசபெத் அராஜோ, அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களின் ஆன்மீகத் தலைவர் ஜோதி, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முதியோர்களின் ஆன்மீகத் தலைவர் எட்மண்ட், இடு மிச்மி அச்சா மிமியின் ஆன்மீகத் தலைவர், ஷிக்ஷா பள்ளத்தாக்கின் நிர்வாக இயக்குநர் புலின் சந்திர கோகோய் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: athering of EldersAssam8th Triennial Conference
ShareTweetSendShare
Previous Post

3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

Next Post

கொட்டும் பனியில் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies