இந்தியாவில் அதிகமான பெண்கள் பணிபுரிகிறார்களா ? - மத்திய அரசு கணக்கெடுப்பு!
Aug 7, 2026, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் அதிகமான பெண்கள் பணிபுரிகிறார்களா ? – மத்திய அரசு கணக்கெடுப்பு!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் உள்ள பெண்கள் பணியிடங்களில் அதிகமாக இருக்கிறார்களா என்பதை அறிய மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் பெண் தொழிலாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து பணியிடங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), இந்தியாவில் மொபைல் சாதனங்களில் ஒரு கணக்கெடுப்பை அனுப்பத் தொடங்கியுள்ளது.

குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இந்த கணக்கெடுப்பு அனுப்பப்படுகிறது. அதில் பெண் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பணியிடம் மற்றும் முதலாளிகள் வழங்கும் ஆதரவு பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது.

மேலும், கணக்கெடுப்பு பெறுபவர்களிடம் அவர்களின் பணியிடங்களை மதிப்பிடவும், இரவு நேர போக்குவரத்து, பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வதற்கான உள் குழு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும் கேட்கிறது.

இந்த கணக்கெடுப்பு முதலாளிகளின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகளை அளவிடுவதற்கும் உதவுகிறது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த முயற்சியை மேற்கொள்வதற்காக அவர்கள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், ” புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் அதிகரித்து 37.0 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நீண்டகால சமூக-பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கொள்கை முன்முயற்சிகள் மூலம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்காக அரசு நிர்ணயித்த தீர்க்கமான செயல்பாடுகளின் விளைவாக, பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதத்தில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெண் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான வசதி, பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அரசின் முன்முயற்சிகள் விரிவடைந்துள்ளன ” எனக் தெரிவித்திருந்தது.

தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-23 ஆம் ஆண்டில் 2.8 மில்லியன் பெண்கள் EPFO ​​இல் பதிவுசெய்துள்ளனர். இது இதுவரை இல்லாத அளவு அதிகரித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

கடந்து ஜனவரி 30 ஆம் தேதி அன்று பணியிடத்தில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண் ஊழியர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், தொழிலாளர் அமைச்சகம், முதலாளிகளுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

மேலும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு பெண்களுக்கான சில வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

மேலும் அவர், ” எங்கள் மாண்புமிகு பிரதமரின் தலைமையில் டிஜிட்டல் ஜனநாயகத்தை நினைத்து நாங்கள் பெருமையுடன் இருக்கிறோம், இன்று நாடு முழுவதும் 24 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

Tags: India
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Next Post

ஸ்ரீ பாலமுருக பழனியாண்டவர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அண்ணாமலை!

Related News

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies