80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! - சொல்கிறார் ஹெச்.ராஜா!
Apr 29, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! – சொல்கிறார் ஹெச்.ராஜா!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழல் வழக்கு உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 6 அமைச்சர்கள், 80 நாட்களுக்குள் சிறை செல்வது உறுதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

திமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என்றால், வரும் 80 நாட்களுக்குள் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க மாநிலக் கட்சி அல்ல. தேசிய கட்சி. எனவே, கூட்டணி அமைப்பதை அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடு, கருத்துச் சொல்லும் போது தான் தெரியும். அப்போதுதான் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்றார்.

புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம்தான் மம்தா பானர்ஜி. அவரே சொல்கிறார், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 400 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விசயம். யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரிய வேண்டியது கட்டாயம். சட்ட விரோத எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ. சோதனை நடத்தாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: h raja
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

Next Post

அரிசி, நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies