80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! - சொல்கிறார் ஹெச்.ராஜா!
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! – சொல்கிறார் ஹெச்.ராஜா!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழல் வழக்கு உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 6 அமைச்சர்கள், 80 நாட்களுக்குள் சிறை செல்வது உறுதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

திமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என்றால், வரும் 80 நாட்களுக்குள் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க மாநிலக் கட்சி அல்ல. தேசிய கட்சி. எனவே, கூட்டணி அமைப்பதை அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடு, கருத்துச் சொல்லும் போது தான் தெரியும். அப்போதுதான் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்றார்.

புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம்தான் மம்தா பானர்ஜி. அவரே சொல்கிறார், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 400 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விசயம். யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரிய வேண்டியது கட்டாயம். சட்ட விரோத எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ. சோதனை நடத்தாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: h raja
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

Next Post

அரிசி, நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies