அதிர்ச்சி - 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!
Apr 29, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி – 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பல்கி பெருகி வருகிறது. இதை தமிழக பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புள்ளி விவரங்களோடு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள் நடைபெற்றது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, அரசு விதிகளின்படி, 18 வயது நிரம்பிய பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும் 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் அதிக அளவு பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், கிராமப்புறங்களில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பை தொடர முடியாமல் 18 வயதில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது.

இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால், பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,488 இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில் 1,101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மட்டும் சுமார் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாகப் புறநகர் பகுதியில் உள்ள மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதும் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இப்படி சட்ட விரோதமாக மைனர் பிரசவங்கள் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Shock - 1448 minor deliveries in 3 years!
ShareTweetSendShare
Previous Post

அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Next Post

அபுதாபி இந்து கோவில் : மத நல்லிணக்கத்தின் சின்னம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies