தமிழகத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை – எல்.முருகன்!
Feb 7, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை – எல்.முருகன்!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மின் தூக்கி வசதி, தானியங்கி படிக்கட்டுகள், ரயில்வே கோச் வடிவில் உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி, பயணச் சீட்டு அலுவலகம் ஆகியவை இங்கு அமைக்கப்பட உள்ளன.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் பங்கேற்றார்.

பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, இந்திய ரயில்வே துறையில், 26-ஆம் தேதி மிக முக்கியமான நாள் என்றும், நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே வளர்ச்சி பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் திட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேட்டுப்பாளையம் பகுதியில் ரயில் பாதைகளை சீரமைக்க சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை, இராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஏழு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது என்று கூறினார்.

Tags: L MuruganCentral Minister
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

Next Post

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies