மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இதில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறையையும், சட்டத்தையும் முதல்வர் கெஜ்ரிவால் மதிக்காமல் அவமரியாதை செய்து வருகிறார் என பாஜக மற்றும் சமூக ஆர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.