WPL : உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 15வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அலிசா 29 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, கிரேஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது.

அதேபோல் டெல்லி அணியில் அதிகபட்சமாக ராதா யாதவ் மற்றும் டைட்டாஸ் சாது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் ஷிகா, அருந்ததி, ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் மேக் லானிங் 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஷாபாலி வர்மா மற்றும் ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் தலா 15 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும், 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் என்ற நிலையில் இருந்தது டெல்லி கேபிடல்ஸ்.

டெல்லி அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.

அவர் முன்னதாக வீசிய ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அத்துடன் 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அதே ஓவரின் நான்காவது பந்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரின் முடிவில் 129 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது டெல்லி.

அடுத்ததாக 6 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரில் வந்தபோது கிரேஸ் களத்தில் இறங்கினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் ராதா யாதவ். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. இன்னும் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது டெல்லி அணி.

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ராதா யாதவ் பவுல்டு அவுட் ஆனார். நான்காவது பந்தில் ஜெஸ் ரன் அவுட் ஆனார். ஐந்தாவது பந்தில் டிடாஸ் சாது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 137 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இதை அடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ். 11 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ்.

உ.பி. அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தினார். சைமா மற்றும் கிரேஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சோஃபி எக்லெஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது உ.பி. அணியின் தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLWPL : UP Warriors Thrill Victory!
ShareTweetSendShare
Previous Post

அசாமில் யானை சவாரி செய்தார் பாரத பிரதமர் மோடி!

Next Post

குரூப்-1 பணிக்கு நேர்காணல் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies