கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Sep 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 12:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விரிவாக்கம், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து என்.சி.சி.க்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1948-ஆம் ஆண்டில் வெறும் 20,000 மாணவர்களைக் கொண்டிருந்த  என்.சி.சி, இப்போது அதன் பொறுப்புகளில் 20 லட்சம் பேரைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி என்.சி.சி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாக வழங்கப்படுவதால், இந்த விரிவாக்கம் தேசத்தின் எதிர்காலத் தலைவர்களாக முக்கியப் பங்கு வகிப்பதை நோக்கிய இளைஞர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக  இருக்கும்.

இந்த விரிவாக்கத்தின் நீண்டகாலத் தாக்கம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலியிடங்களை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வழிவகுக்கும். மேலும் தேசிய மாணவர் படையில் சேர விரும்பும் நிறுவனங்களின் காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும். விரிவாக்கத் திட்டத்தில் நான்கு புதிய குழு தலைமையகங்களை நிறுவுதல் மற்றும் இரண்டு புதிய என்.சி.சி அலகுகளைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும்.

முன்னாள் ராணுவ வீரர்களை தேசிய மாணவர் படை பயிற்றுனர்களாக நியமித்து அவர்களின் திறமை மற்றும் பரந்த அனுபவத்தை மேம்படுத்துவது, விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த உன்னத முயற்சி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதை உறுதி செய்வதுடன், முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

இந்த விரிவாக்கம், ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. தேச நிர்மாணத்திற்கு இளைஞர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் சூழலை ஊக்குவித்து, மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை தேசிய மாணவர் படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியானது ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘அமிர்த தலைமுறை’யின் உந்துதல், ஒழுக்கம் மற்றும் தேசபக்தி கொண்ட இளைஞர்களின் தளத்தை விரிவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Defense Minister Rajnath SinghNCC Cadets
Share
Tweet
SendShare
Previous Post

ஆளுநர் உள்ளே – அமைச்சர் வெளியே – சென்னையில் பரபரப்பு!

Next Post

ரஞ்சி கோப்பை : சதம் அடித்த இளம் வீரர் – சச்சின் சாதனை முறியடிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies