கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Jul 30, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் NCC விரிவாக்கும் திட்டத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விரிவாக்கம், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து என்.சி.சி.க்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1948-ஆம் ஆண்டில் வெறும் 20,000 மாணவர்களைக் கொண்டிருந்த  என்.சி.சி, இப்போது அதன் பொறுப்புகளில் 20 லட்சம் பேரைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி என்.சி.சி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாக வழங்கப்படுவதால், இந்த விரிவாக்கம் தேசத்தின் எதிர்காலத் தலைவர்களாக முக்கியப் பங்கு வகிப்பதை நோக்கிய இளைஞர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக  இருக்கும்.

இந்த விரிவாக்கத்தின் நீண்டகாலத் தாக்கம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலியிடங்களை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வழிவகுக்கும். மேலும் தேசிய மாணவர் படையில் சேர விரும்பும் நிறுவனங்களின் காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும். விரிவாக்கத் திட்டத்தில் நான்கு புதிய குழு தலைமையகங்களை நிறுவுதல் மற்றும் இரண்டு புதிய என்.சி.சி அலகுகளைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும்.

முன்னாள் ராணுவ வீரர்களை தேசிய மாணவர் படை பயிற்றுனர்களாக நியமித்து அவர்களின் திறமை மற்றும் பரந்த அனுபவத்தை மேம்படுத்துவது, விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த உன்னத முயற்சி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதை உறுதி செய்வதுடன், முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

இந்த விரிவாக்கம், ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. தேச நிர்மாணத்திற்கு இளைஞர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் சூழலை ஊக்குவித்து, மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை தேசிய மாணவர் படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியானது ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘அமிர்த தலைமுறை’யின் உந்துதல், ஒழுக்கம் மற்றும் தேசபக்தி கொண்ட இளைஞர்களின் தளத்தை விரிவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Defense Minister Rajnath SinghNCC Cadets
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் உள்ளே – அமைச்சர் வெளியே – சென்னையில் பரபரப்பு!

Next Post

ரஞ்சி கோப்பை : சதம் அடித்த இளம் வீரர் – சச்சின் சாதனை முறியடிப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies