அதிகரிக்கும் வெப்பம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் வெப்பம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடைக் காலத்தில், மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கி உள்ளது.

அதன்படி, மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட விஷயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மருத்துவமனைகளிலும், விரிவான தீ பாதுகாப்பு தணிக்கை மற்றும் கள ஆய்வுகளை நடத்த வேண்டும். தீயணைக்கும் அமைப்புகள், தீ எச்சரிக்கை அலாரம், தீ புகை கண்டுபிடிப்பான்கள், தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு லிஃப்ட்கள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தீ தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தீயணைப்பு கருவிகள், ஹைட்ரான்ட்கள் மற்றும் அலாரங்கள் போன்ற தீயணைப்பு உபகரணங்களை மருத்துவமனைகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுக்கும் பராமரிப்பு அட்டவணையை அமைக்கவும், தீயை அணைக்கும் கருவிகளின் மாதாந்திர சோதனைகள், தீ அலாரங்கள் மற்றும் ஹைட்ரான்ட்டுகளின் காலாண்டு சோதனைகள் மற்றும் தொடர்புடைய இந்திய தரநிலைகளின்படி அவற்றின் செயல்திறனைச் சான்றளிப்பதற்கான வருடாந்திர தொழில்முறை ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தொடர் ஆய்வுகளை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Tags: Increasing heat: Central government advice to state governments!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம்!

Next Post

தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies