சென்னை ஏரிகளின் நீர்மட்டம் எப்படி இருக்கிறது?
Aug 9, 2026, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஏரிகளின் நீர்மட்டம் எப்படி இருக்கிறது?

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் தண்ணீர் வற்றி, நீர்மட்டம் குறைந்து வருகிறது. உரிய நேரத்தில் பருவமழை பெய்யாவிட்டால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஏரிகளின் நீர்மட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.

தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் செம்பரம்பாக்கம், பூண்டி,சோழவரம், வீராணம்,புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த ஏரிகளில் சரியான அளவில் நீர்இருப்பு இருந்தால் மட்டுமே கோடைகாலங்களில் சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை எந்தவொரு சிரமமின்றி நிறைவேற்ற முடியும். ஏரிகளில் நீர்மட்டம் சற்று குறைந்து விட்டாலும்,கோடை காலத்தில் மக்களின் இயல்புவாழ்க்கையில் அது கடுமையாக எதிரொலிக்கும்.

இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுவதால், அப்படிப்பட்ட நிலைமையை நோக்கி தான் சென்னை நகர்ந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் முழுகொள்ளளவு மூன்றாயிரத்து 231 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில்,கோடை வெப்பத்தின் காரணமாக நீர்மட்டம் தற்போது ஆயிரத்து 20 மில்லியன் கனஅடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டில் இதே தேதியில் ஆயிரத்து 199 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் பதிவாகி இருந்தது.

சோழவரம் ஏரியிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது.இந்த ஏரியின் முழுகொள்ளளவு ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி. ஆனால் தற்போது நீர்மட்டம் 130 மில்லியன் கனஅடியாக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டில் இதே தேதியில் 787 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர்இருப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களிலேயே மிகப்பெரும் நீர் கொள்ளளவை கொண்ட ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி பார்க்கப்படுகிறது. இதன் முழுகொள்ளளவு மூவாயிரத்து 645 மில்லியன் கனஅடியாகும்.ஆனால் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் இராண்டாயிரத்து 389 மில்லியன் கனஅடியாக மட்டுமே உள்ளது. கடந்தாண்டில் இரண்டாயிரத்து 799 மில்லியன் கனஅடி நீர் இருந்தது.

மூன்றாயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியில் நிலைமை சற்று வேறுபட்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இரண்டாயிரத்து 424 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இரண்டாயிரத்து 930 மில்லியன் கனஅடி நீர்இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவே கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 386 மில்லியன் கனஅடி மட்டுமே இந்த ஆண்டில் நீர் தேக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 474 மில்லியன் கனஅடியாக பதிவாகியிருந்தது. மொத்தம் 500 மில்லியன் கனஅடி நீரை தேக்கிவைக்கும் கொள்ளளவை கொண்டதாக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி உள்ளது.

ஆயிரத்து 465 மில்லியன் கன அடி கொள்ளவை கொண்ட வீராணம் ஏரியில் கடந்த ஆண்டில் இந்த நேரத்தில் 580 மில்லியன் கனஅடி நீர்மட்டம் பதிவாகி இருந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் தற்போது ஆறாயிரத்து 855 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டில் இந்த தேதியில் எட்டாயிரத்து 263 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமார் ஆயிரத்து 400 மில்லியன் கனஅடி நீர் குறைந்து காணப்படுகிறது.

கத்திரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில்,தற்போதே ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது சென்னை மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: How is the water level of Chennai lakes?
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு!

Next Post

ஆந்திர ரயில் விபத்து: கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை ரயில்வே நிர்வாகம்!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies