தாய்மொழியில் பொறியியல் கல்வி: அதிகரிக்கும் ஆர்வம்!
Apr 21, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாய்மொழியில் பொறியியல் கல்வி: அதிகரிக்கும் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் கல்வியை தாய்மொழியில் படிக்கலாம் என்று பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அறிவித்ததன் விளைவாக, தற்போது தாய்மொழியில் பொறியியல் படிப்புகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட, பொறியியல் படிப்பில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு காரணம், ஆங்கில மொழியின் மீதான அச்சம் . எனவே பொறியியல் படிக்க ஆசை இருந்தும் மாணவர்கள் பலர் தொழில்நுட்பக் கல்வியில் சேராமல் புறக்கணித்து விடுகின்றனர்.

இதனை. கருத்தில் கொண்டு ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது.

அதில், பொறியியல் படிப்புகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க விரும்புகின்றனரா அல்லது மாநில மொழிகளில் கற்க விரும்புகின்றனரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 42 சதவீத மாணவர்கள், மாநில மொழிகளிலேயே பொறியியல் படிப்புகளை படிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் , புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி , தொழில்நுட்பக் கல்வியைப் படிக்க ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் பொறியியல் கல்வியை மாநில மொழிகளில் கற்க பிரதமர் மோடி தலைமையிலான ஒரு முக்கிய முடிவு எடுத்தது.

2021ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிரதமர் மோடி , இந்த அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்போடு இல்லாமல் , 2012ம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மத்திய அரசின் நிதி பெறும் 106 தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் கலந்துரையாடினார்.

மாநில மொழிகளில் பொறியியல் கல்விப் பயிற்றுவிப்பதற்கான அவசியம் , தொழில் கல்வித் துறையில் முன்னிற்கும் சவால்கள் மற்றும் அந்த சவால்களை சமாளிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி அந்தக் கூட்டத்தில் விளக்கினார்.

இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய 11 மாநில மொழிகளில் தொழில் நுட்பக் கல்வி பயில, பயிற்றுவிக்க அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்தது.

இதன் தொடர்ச்சியாக , முதல் கட்டமாக , தமிழ் உட்பட எட்டு மாநில மொழிகளில் பொறியியல் படிப்புகளை பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 18 தனியார் கல்லூரிகள் உட்பட 22 பொறியியல் கல்லூரிகளில் மாநில மொழிகளில் தொழில் நுட்ப கல்வி படிக்க 2,580 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தகவல் அறிக்கையின் படி , தாய்மொழியில் தொழில் நுட்ப படிப்புகளில் சேர்க்கை ஒட்டுமொத்தமாக உயர்ந்துள்ளது.

2021-22 கல்வியாண்டில் மொத்தம் 80 சதவீத இடங்கள் காலியாக இருந்து நிலை மாறி 2022-23 கல்வியாண்டில் காலியான இடங்கள் 53 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் உத்தர பிரதேசத்தில் இந்த தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வி நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை மானவர்கள் சேர்க்கையில் இருந்தே கண்கூடாக காண முடிகிறது .

இந்த புதிய நடைமுறையால் மாநில மொழியில் கல்வி கற்பதோடு , அந்தந்த மாநில பண்பாட்டுடனும் பெற்ற கல்வியறிவை தேசத்துக்கு பயன்படுத்தும் எண்ணமும் மாணவர்களிடையே உருவாகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய சாதனைகளில் முதன்மையான சாதனை இது. அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வாழ்வும் வளமும் சேரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

நிறைய தொழில் நுட்ப அறிஞர்கள் தேவைப்படும் சூழலில் அதுவும் தாய்மொழியில் தொழில் நுட்ப கல்வி பெற்ற அறிஞர்கள் இந்தியாவில் உருவாகும்போது, உலகத்துக்கே பாரதம் விஸ்வ குரு ஆவது நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Tags: Increasing interest in engineering education in mother tongue!
ShareTweetSendShare
Previous Post

மாமூல் கேட்டு மிரட்டுவதாக திருநங்கைகள் புகார்!

Next Post

சிப்காட் ரத்து கோரி பதிவு தபால் மனு அனுப்பும் போராட்டம்!

Related News

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies