கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!
Jun 15, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2024, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு எண்ணும் மையத்தில் கெட்டுப்போன உணவை தேர்தல் அதிகாரிகள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்து வருகிறது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நுண்பார்வையாளர்கள் 113 பேர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் 119 பேர், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் 121 பேர், அலுவலக உதவியாளர்கள் 101 பேர் என மொத்தம் 454 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களுக்கு காலை, மதியம் உணவு சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கெட்டு போன உணவு வழங்கப்பட்டதால் தேர்தல் பணியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

மேலும் காலை உணவு தான் கெட்டு போனதாக உணவு வழங்கப்பட்டாலும், மதிய உணவானது  நல்ல முறையில் வழங்கப்படும் என நினைத்த தேர்தல் பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

மதிய உணவு சப்பாத்தி அடங்கிய மினி மீல்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வைக்கப்பட்டு இருந்த உணவுகள் அனைத்தும் கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதனால் தேர்தல் பணியாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

உடனே மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரவீன் குமாரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் தெரிவித்தனர்.

காலை உணவும் சரியில்லை, மதிய உணவும் சரியில்லை என்றால் என்ன செய்வது, எப்படி பணி புரிவது என ஆதங்கத்தோடு தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் முறையிட்டனர்.

உடனடியாக மாற்றித்தர ஏற்பாடு செய்வதாக கூறி, தேர்தல் பணியாளர்களை அனுப்பி வைத்தார்.

இதே கெட்டு போன உணவு தான் பத்திரிகையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடகத்தினருக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Election officials who served spoiled food!
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் முடிவுகள்!- பாஜக முன்னிலை!

Next Post

முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies