2 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்ற நோட்டா!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்ற நோட்டா!

Murugesan M by Murugesan M
Jun 5, 2024, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், அதிகபட்சமாக இரண்டு லட்சத்துக்கும் மேலான வாக்குகளுடன் நோட்டா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான பின்னணி என்ன? என்பத பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

1989ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பாஜகவின் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்ற தொகுதி தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நாடாளுமன்றத் தொகுதி. 2019ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷங்கர் லால்வானியையே இம்முறையும் வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்தூர் தொகுதியில் அக்‌ஷய் காந்தி பாம்ப், வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், வேட்புமனுவைத் திரும்ப பெறும் கடைசி நாளில்,தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதோடு மட்டும் இல்லாமல் ,உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி , பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் 72 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தேர்தலில் வேட்பாளர் நிறுத்தியும் போட்டியிட முடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.

இப்படி, கடைசி நேரத்தில் தனது வேட்பாளர் வாபஸ் பெற்றதால், என்ன செய்வது என்று அறியாத காங்கிரஸ் கட்சியினர், நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் தான், இந்தூரில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானிக்கும் , நோட்டாவுக்கும் தான் போட்டி என்ற நிலை உருவானது.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகுள்இந்தூரில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானி 12 லட்சத்து 26751வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சோலங்கி 50, 524 பெற்றுள்ளார்.

இந்தூர் தொகுதியில், நோட்டா இது வரை இல்லாத அளவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகள் பெற்று, இரண்டாவது அதிகபட்ச வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தேர்தலில் நோட்டா இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் நோட்டாவுக்கு 46,559 வாக்குகள் கிடைத்தன. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 51 ஆயிரத்து 660 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தன. இது அந்த தொகுதியில் பதிவான தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 5 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு தேர்தல்களில் நோட்டாவுக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது. கடந்த 2014 தேர்தலில், நோட்டாவுக்கு 60,02,842 வாக்குகள் பதிவான நிலையில், 2019 தேர்தலில் 65,22,772 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Nota with more than 2 lakh votes!
Share
Tweet
SendShare
Previous Post

வரும் 7ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கும் பிரதமர் மோடி!

Next Post

இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் விஸ்வரூபம் எடுத்த பாஜக!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies