கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்! - நடிகர் விஜய்
Jun 22, 2026, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்! – நடிகர் விஜய்

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பிடித்த துறையை தேர்ந்தெடுத்து 100% முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வெற்றி பெறலாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய்,  ரூ. 5000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாராட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரம் மோதிரமும் வழங்கப்பட்டது.

முன்னதாக விழா மேடைக்கு வந்த விஜய் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்,

எல்லா துறைகளும் நல்ல துறையே. நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான்.

தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை. மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.

நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது, ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது.

ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல, அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள்.

தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள். நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்காகவும் உங்கள் அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார்.

Tags: The best in education should come to politics! - Vijay
ShareTweetSendShare
Previous Post

மரக்கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து!

Next Post

அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies