பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 12:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தலின் போது பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொழுது நெல்லை ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அவரது ஹோட்டல் நிர்வாகியான மணிகண்டன் மற்றும் நெல்லை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்தார் முரளிதரன் ஆகிய மூன்று பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நயினார்  நாகேந்திரனிடம் கேட்கப்பட்டதாகவும், மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,

சன் செய்திகளில் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாகவும், எத்தனையோ வழக்குகள் நாட்டில் இருக்கும் போது தொடர்ச்சியாக தவறான செய்தியை போடுவதன் காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

கோவையில் காவல் ஆய்வாளர் என கூறி பெட்டி கடைக்காரரிடம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கியவரோடு எனது புகைப்படத்தை இணைத்து செய்தியாக போடுகிறார்கள். நல்ல செய்தியை சொல்ல வேண்டியதை விட்டு விட்டு தவறான செய்திகளை போட்டு வருகிறீர்கள். தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் நடந்து வருகிறது. அதை எந்த ஊடகமும் பெரிது படுத்துவது இல்லை. ஆனால் 4 கோடி ரூபாய் செய்தியை நான்கு மாதமாக போடுவதற்கு காரணம் என்ன.? என் மீது ஏதும் காழ்ப்புணர்ச்சி உள்ளதா.?

அந்த 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 4 கோடி ரூபாய் பண விவகாரத்தை மீண்டும் மீண்டும் ஊடகத்தில் காட்டுவது வேதனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மதுரையில் கொல்லப்பட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளார்கள் இந்தச் செய்திகள் எல்லாம் இருக்கும்போது பொய் செய்திகளை மட்டும் ஊடகத்தினர் பரப்புவதற்கு காரணம் என்ன?.

இன்று சிபிசிஐடி அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பணம் எவ்வாறு வந்தது என கேள்வி கேட்டார்கள், பணத்துக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்தேன். நான் திருநெல்வேலி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் யாரோ தொடர்வண்டியில் எடுத்துச் சென்றதற்கு நான் பொறுப்பாக முடியுமா?.

எனக்கு தெரியாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர் தவறு செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா… எனது மகன் என்னை பார்க்க தான் வந்தார், விசாரணைக்காக வரவில்லை. மீண்டும் விசாரணைக்கு அழைக்கவில்லை என தெரிவித்தார். ஊடகங்களில் நல்ல தரமான செய்திகளை போட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: I have nothing to do with the Rs 4 Crore money seized! - Nayanar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டட தொழிலாளி பலி!

Next Post

யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies