நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இளம்பெண் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மணிமேகலை என்ற பெண்ணை மங்களபுரத்தை சேர்ந்த ரமேஷ், இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணிமேகலைக்கும், பாலாஜி என்பருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிமேகலை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பாலாஜி, பட்டணம் ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்துவிட்டு உடலை எரித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலாஜியை கைது செய்தனர்.