பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி
Apr 29, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த வகையில், அவர் பிரதமராக 3-ஆவது முறை பொறுப்பேற்றதும் 112 ஆவது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதை நினைவுகூர்ந்து, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியானது, நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கான வாய்ப்பை தந்திருப்பதாகவும், இந்திய வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அஸ்ஸாமில் அஹோம் இன மக்கள் தங்களது மூதாதையர்களின் சடலத்தைப் பேணி காத்த சரைடியோ மைடம் நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் இந்தியாவிலிருந்து 43 பகுதிகளும், வடகிழக்கிலிருந்து முதலாவது பகுதியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

கலாசாரத்தை பேணும் தேசம்தான் முன்னேறும் என்றும், இந்தியாவின் கலை வளத்துக்கு கலைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசால் மனாஸ் மையம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மறுவாழ்வு பெற விரும்புபவர்கள் மனாஸ் மையத்தின் இலவச உதவி எண்ணான 1933-ஐ தொடர்புகொள்ளளாம் என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் கதர் தொழிற்சாலையின் வருமானம் முதன்முறையாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கடந்ததாகவும், இது 400 சதவீத உயர்வு என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiMaan ki baatParis Olympics:Indian athletes.
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

Next Post

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies