கைமாறிய இந்தியா சிமெண்ட்ஸ்! : ரூ.3954 கோடிக்கு வாங்கிய பிர்லா!
Jun 23, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைமாறிய இந்தியா சிமெண்ட்ஸ்! : ரூ.3954 கோடிக்கு வாங்கிய பிர்லா!

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்தியாவின் பெரிய சிமெண்ட் சாம்ராஜ்ஜியத்தின் பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றி இருக்கிறது. 3954 கோடி ரூபாய்க்கு நிறுவன பங்குகளைக் கொடுத்துவிட்டு இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறுகிறார் ஸ்ரீனிவாசன். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 9 பெரிய பட்டிலயிலிடப்பட்ட சிமெண்ட் நிறுவனமாகும்.

ஆண்டுக்கு சுமார் 13 மெகா டன் சிமெண்ட்டை தென்னிந்தியாவிலும், 1.5 மெகா டன் சிமெண்ட்டை ராஜஸ்தானிலும் உற்பத்தி செய்து வருகிறது

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவருமான 80 வயதான ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தனது தந்தை டி .எஸ். மறைவை அடுத்து, அமெரிக்காவில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த 23 வயதான என் ஸ்ரீனிவாசன் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிறகு படிப்படியாக வளர்ந்து, 1989ம் ஆண்டு முதல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார் ஸ்ரீனிவாசன்.

1946ம் ஆண்டு எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில்1949 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

தமிழ்நாடு, தெங்கானா மற்றும் ஆந்திராவில் ஏழு ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளும் ராஜஸ்தானில் திரிநேத்ரா சிமெண்ட் தொழிற்சாலையும் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு தொழிற்சாலையும் இந்தியா சிமெண்ட்ஸ் வசம் வைத்திருந்தது.

சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட் மற்றும் ராசி கோல்ட் என மூன்று முக்கிய பிராண்டுகளைத் தன வசம் வைத்துக் கொண்டு, தென்னிந்தியாவின் சிமெண்ட் தொழில்துறையில் மிகப் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கெனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளை 268 ரூபாய் என்ற விலைக்கு அல்டரா டெக் சிமெண்ட் நிறுவனம், கடந்த ஜூன் மாதம் வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவீத பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கி இருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை , மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின்32.72 சதவீத பங்குகளை வாங்குதற்கு , அல்ட்ரா டெக் நிறுவன நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்தியா சிமெண்ட்ஸ் 10,13,91,231 பங்குகளை ஒரு பங்குக்கு 390 ரூபாய் விலைக்கு என்ற கணக்கில் மொத்தம் 3954 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அல்ட்ரா டெக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சுமார் 55 சதவீத பங்குகளை அல்ட்ரா டெக் கைப்பற்றியுள்ளது.

இது மட்டுமில்லாமல் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் குருநாத், மற்றும் நிதி சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ரூபா குருநாத் ஆகியோரிடமிருந்து 6.44 சதவீத பங்குகளையும் அல்ட்ரா டெக் வாங்க உள்ளது.

அதிகமான உற்பத்தி செலவு அழுத்தங்கள், போட்டி காரணமாக ஏற்பட்ட விலை நிர்ணய சிக்கல்கள் மற்றும் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சமாளிக்க முடியாமல் போய்விட்டன. இதன் காரணமாகவே, நிறுவனத்தின் பங்குகளை அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்ததாக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்களுக்கு உரையாற்றிய அவர், பல ஆண்டுகளாக ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, ஊழியர்களின் தொழிலில் எந்தவித மாற்றம் ஏற்படாது என்று தெரிவித்தார். மேலும் , இந்தியா சிமெண்ட்ஸில் இதுவரை நடைமுறையில் இருந்த அதே கொள்கைகளையே பின்பற்றப் படும் என்று பிர்லா குழுமம் தனிப்பட்ட முறையில் தனக்கு உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

எனவே, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் எவரும் எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டிய வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, முதலில் பிசிசிஐயின் செயலாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் இருந்த ஸ்ரீனிவாசன், 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, ​​இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (CSK) ஏலம் எடுத்து தனது தனித்துவத்தைக் காட்டினார். இன்று ஐபிஎல் என்றாலே CSK என்ற பெருமையை உண்டாக்கிக் கொடுத்த பெருமை ஸ்ரீனிவாசனையே சேரும்.

Tags: Changed hands India Cements! : Birla bought for Rs.3954 crore!
ShareTweetSendShare
Previous Post

வீழ்ச்சியை நோக்கி சீன பொருளாதாரம்? அதிர வைக்கும் பின்னணி!

Next Post

3 IAS பயிற்சி மாணவர்கள் பலியாக காரணம் என்ன? விதிமீறலால் விபரீதம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies