டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Jan 22, 2026, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் தனித்தனியாக கைது செய்தன.

ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீண்டகால சிறைவாசம் சுதந்திரத்தை அநியாயமாக பறிப்பதற்கு சமம் என்று கூறிய நீதிபதிகள், 10 லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்த அறிவுறுத்தி, கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அந்த வகையில் ஜாமீன் காலத்தில் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும், விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.

மேலும், கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி உஜ்ஜல் புயான், சிபிஐயின் நடவடிக்கையால் அமலாக்கத் துறை வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்.

Tags: bail to kejriwalsupreme courtDelhi chief minister Arvind KejriwalDelhi liquor policy caseCBI case
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

Related News

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies