இரண்டாவது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெற்று வருகிறார். இரண்டாவது நாளாக சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பிலான அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். அப்போது ஆதரவு எம்எல்ஏக்களை சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது விஜய் பார்த்து உற்சாகமடைந்த லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் அவரது கைகளை கண்களில் ஒத்திக்கொண்டார்.
முன்னதாக மண்ணடியில் உள்ள ஐயூஎம்எல் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் சந்தித்து பேசினார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனுக்கு சென்ற விஜய், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார்.
இறுதியாக விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்துப் பெற்றார். வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர். முதலமைச்சர் விஜய்க்கு அரசமைப்பின் முகப்பு பக்கத்தை திருமாவளவன் பரிசளித்தார்.
















