பெரம்பலூரில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த யுவராஜ் என்பவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பட்டாசு கொள்முதல் செய்ய அவர் சிவகாசிக்கு புறப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் அருகே சரக்கு வாகனத்தில் யுவராஜ் பயணித்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த 6 நபர்கள் அவரை சுற்றிவளைத்துள்ளனர். தொடர்ந்து யுவராஜை கத்தியால் குத்திய மர்மநபர்கள், அவரிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.