விழுப்புரத்தில் நடைபெற்ற இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழாவில், ஸ்டாலின், சீமான், வைகோ ஆகியோர் அருகருகே அமர்ந்து உரையாடியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பட்டானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சீமானின் அருகே அமர்ந்த ஸ்டாலின், அவருடன் நீண்ட நேரம் உரையாடினார். மேலும், வைகோவிடமும் நலம் விசாரித்து பேசினார். ஸ்டாலின், சீமான், வைகோ ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்து பேசியது அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.
==
















