சேலத்தில் தொடர் கனமழையால், அழகாபுரம், தெரசா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
மேலும், வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுடன், கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கிறது. இதனால், அலுவலகங்களுக்கு செல்வோரும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் பாதிப்படைந்தனர்.
எனவே, மழைநீர் வடிய மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்