ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், தனிப்பட்ட காரணங்களாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக கடந்த 2024ம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அமைந்துள்ளது.
இதனால் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக தலைமை செயலாளருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்திலும் அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















