ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் மாற்றப்பட்டு, ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி.கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு, கே.நந்தகுமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பி.அமுதா மாற்றப்பட்டு முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை முதன்மை செயலராக டாக்டர் எஸ்.சுவர்ணா நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சரின் கூடுதல் செயலராக விஷ்ணுவும், முதலமைச்சரின் 3-ஆவது முதன்மை செயலராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே முதல்வரின் தனிச்செயலராக செந்தில் குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளான உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
















