பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
முதலமைச்சராக விஜயும், 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரி பாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும். தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















