இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மோசமான செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு கொள்முதலைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாட்டினம் நகைகளுக்கான இறக்குமதி சுங்கவரியும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















