பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!
Jul 6, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய செய்தி தொகுப்பை சற்று விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செயல்பட்டு வரும் சல்மா மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் இந்த பொன்சிங். தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ – மாணவிகளை பொன்சிங் அழைத்துச் சென்றுள்ளார். விளையாட்டுப் போட்டிகள் முதல்நாளில் முழுமையாக நிறைவடையாத நிலையில் மறுநாளும் விளையாட வேண்டிய சூழல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டது.

அன்று இரவே உடன்குடிக்கு திரும்பி மீண்டும் மறுநாள் காலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு வருவது கடினமானது எனக்கூறி மாணவ, மாணவியர்கள் அனைவரையும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கும் அதே அறையில் தங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் மது போதையில் தத்தளித்த பொன்சிங், தூங்கிக் கொண்டிருந்த சில மாணவிகளை எழுப்பி மது அருந்துமாறு வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொன்சிங்கின் அநாகரீகமான செயல்களுக்கு மறுப்பு தெரிவித்த மாணவிகளை மது அருந்த கட்டாயப்படுத்தியதோடு, அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவுகளையும் அளித்துள்ளார்.

இரவு முழுவதும் அச்சத்துடனே தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் தூத்துக்குடியில் உள்ள தங்களின் இல்லங்களுக்கு திரும்பிய பின், விடுதி அறையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கின் அநாகரீக செயல்கள் குறித்தும் சொல்லி கதறி அழுதுள்ளனர். பெண் குழந்தைகளின் கதறலை கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கூடி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் பெரிதானதை அறிந்ததும் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி, திருச்செந்தூர் காவல் உதவி ஆணையர், தாசில்தார் என சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கால் தொந்தரவுக்கு உள்ளான மாணவிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசினர்.

உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கிற்கும், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் எதிரான போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இருப்பினும் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி தகாத முறையில் நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கோவையில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போக்சோ வழக்கில் கைது திருச்செந்தூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் சையது அகமது ஆகியோரும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்கால தலைமுறையான மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தந்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்புமிக்க ஆசிரியரே, மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்றிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: tiruchendurtuticorinphysical education teachersexually harassed studentsPOCSOSalma Higher Secondary SchoolRemove term: physical education teacher physical education teacher arrestEbengudi
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்!

Next Post

இந்திய SATCOM சந்தை : கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் – சிறப்பு கட்டுரை!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies