இலங்கை பிரதமராக ஹரிணி : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லூரி - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை பிரதமராக ஹரிணி : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லூரி – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி இந்து கல்லூரியில் படித்து தற்போது இலங்கையின் பிரதமராக உயர்ந்துள்ள ஹரிணி அமர சூரிய கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் , தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் 56 வயதான அநுர திஸாநாயக்க வெற்றி பெற்று, இலங்கையின் 9 வது அதிபராக பதவி ஏற்றார்.

அநுர திஸாநாயக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த 54 வயதான ஹரிணி அமர சூரிய, இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அவருக்கு, கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

1970 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த ஹரிணி அமர சூரிய, கொழும்பு பிஷப் கல்லூரியில் படிப்பை முடித்தார். பிறகு, இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.அதன்பின் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பெற்றபின், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

பல நாடுகளில் பல கல்லூரிகளில் படித்திருந்தாலும், டெல்லி இந்து கல்லூரியில் ஹரிணி அமர சூரிய படித்த காலம் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

அரசியல், கலை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல வெற்றியாளர்களை உருவாக்கிய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட டெல்லி இந்து கல்லூரியின் முதல்வர் அஞ்சு ஸ்ரீவஸ்தவா, ஹரிணி பிரதமரானதற்கு பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், 1991ஆம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரை சமூகவியல் மாணவியாக இருந்ததாகவும், ஹரிணியின் வெற்றிக்கு இந்து கல்லூரி முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் அஞ்சு ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அதே போல், இலங்கை பிரதமருடன், இந்து கல்லூரியில் ஒன்றாக படித்த இந்தி திரைப்பட இயக்குனர் நளின் ராஜன் சிங், கல்லூரி விழாக்கள் மற்றும் விவாதங்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஹரிணி பிரதமராகி இருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.

கல்விப் பின்னணி மற்றும் இந்தியாவுடனான ஹரிணி அமரசூரியவின் தொடர்புகளைக் கருத்தில் கொண்டே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், குறிப்பாக கல்வி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர திஸாநாயக்க, நிதி, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா உட்பட பல முக்கிய துறைகளை தன் வசமே வைத்திருக்கிறார்.

வரிகளை குறைக்கும் முடிவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது ஆகியவை இலங்கை முதலீட்டாளர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.

மேலும், ஏற்கெனவே இலங்கையின் 25 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை மறுசீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், இலங்கையின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்..

இந்நிலையில் தான், 2020ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தியில் இணைந்த ஹரிணி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இலங்கையின் பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

Tags: Harini Amara SuryaDelhi Hindu CollegePrime Minister of Sri LankaAnura Dissanayake
Share
Tweet
SendShare
Previous Post

உண்மையான பகத் ஃபாசில் யார் என்பது புஷ்பா-2 திரைப்படத்தில் தெரியும் – நஸ்ரியா பேட்டி!

Next Post

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்த நாள் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies