சர்ச்சை கிளப்பிய இசைவாணியின் பாடல்...!
Jul 30, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home கட்டுரை

சர்ச்சை கிளப்பிய இசைவாணியின் பாடல்…!

Murugesan M by Murugesan M
Nov 25, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐயப்பன் வழிபாடு குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக பாடல் பாடியுள்ள கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பான செய்தி தொகுப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி, சிறு வயதிலிருந்தே கானா பாடல்களில் அதிக ஆர்வம் கொண்ட இசைவாணி, சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படம் ஒன்றிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த மார்கழி மக்களிசை இசை நிகழ்ச்சியில் இசைவாணி பாடிய பாடல் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இசைவாணி அந்த நிகழ்ச்சியில் “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ஐயப்ப பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் இந்த பாடல் பாடப்பட்டிருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவே இசைவாணி இந்த பாடலை பாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த பாடல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாடகி இசைவாணி மீதும், இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அதில், இந்து கடவுளான ஐயப்ப சுவாமி குறித்தும், அதன் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் பாடலை வெளியிட்ட நீலம் கலாச்சார மையத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கழுத்தில் சிலுவை அணிந்தபடி இந்து கடவுளை இழிவுப்படுத்தும் விதமாக இசைவாணி பாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இசைவாணி மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

Tags: Ishaivani's controversial song...!
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் 9 நாளில் 6 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம்! : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி?

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies