வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?
Jul 28, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தப் போகும் அந்த மசோதாவில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..!

இஸ்லாமிய மக்கள் இறையருள் வேண்டி மசூதிகள், தர்க்காக்கள் மற்றும் மதரஸாக்களுக்கு தானமாக வழங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வக்பு சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை கொண்டிருப்பவை வக்பு வாரியங்கள்தான். ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய 8 லட்சத்து 70 ஆயிரம் சொத்துகள் வக்பு வாரியங்கள் வசமுள்ளன. இவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த சொத்துகளை கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் 1958-ஆம் ஆண்டு வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. பிறகு 1995-ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் வக்பு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அதன் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும் வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவேண்டியது அவசியம் என்று கருதி அதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதன்படி, வக்பு வாரியத்துக்கு நிலத்தை கொடுப்பவர் குறைந்தது 5 ஆண்டுகளாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும்.

வக்பு வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க புதிய மசோதா வழி செய்கிறது. வக்பு கவுன்சில் மற்றும் மாநில அளவிலான வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுகிறது.

அதே போல் வக்பு சட்டம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது. அவர் இஸ்லாமியராக இல்லாவிட்டாலும் வக்பு வாரிய சொத்து பிரச்னைகளில் இறுதி முடிவு எடுக்க முடியும்.

புதிய மசோதாவின்படி வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது.

வக்பு நிலங்களை டிஜிட்டல் முறையில் பட்டியலிடவும், வக்பு நிலமாக அறிவிக்கப்படும் முன்பு சம்மந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கவும் மசோதா வழி செய்கிறது.

இதுபோன்ற பல்வேறு திருத்தங்களைக் கொண்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தது. வக்பு வாரிய சொத்துகளை முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கும் முயற்சி இது என இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியதை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக வக்பு மசோதா அனுப்பப்பட்டது.

தமது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் வழங்க இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரிலேயே வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: bjpWhat does the Waqf Bill say?Waqf Bill
ShareTweetSendShare
Previous Post

ராணுவ வீரரை தரதரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Next Post

சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?

Related News

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies