தெலுங்கானா போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 7 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் முழுகு மாவட்டம் கிரேஹவுண்ட்ஸ் – ஏத்தூர்நகரம் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் மறைவான இடங்களில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் நக்சல் குழுவின் கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
மற்ற நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் அந்த இடத்தில் பதுக்கி வைத்திருந்த பெரும் ஆயுத குவியலை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதியில் போலீசார் தேடல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.