மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயிலில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக உதகையில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த 2 தினங்களாக மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தண்டவாளங்கள் சீர்செய்யப்பட்டதால் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து மலை ரயிலில் பயணித்தனர்.