வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jul 28, 2026, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹிமாச்சலம்பிரதேசத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வரும் 3-ம்தேதி குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடர் பனி நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சண்டிகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவானது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் சென்றதால், நீர் நிலைகள் உறைய தொடங்கியுள்ளன. பல இடங்களில் பனிப்பொழிவும் நிலவுகிறது.

ஜம்மு – காஷ்மீரில் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் சுமார் மைனஸ் 3 புள்ளி 8 சென்டிமீட்டருக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. புட்காம் மாவட்டத்தில் ஒன்று புள்ளி 7 சென்டிமீட்டரும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சமவெளிகளில் சுமார் மைனஸ் 4 புள்ளி 3 சென்டிமீட்டரும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலையில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மலை சுற்றுலா தலமான மவுண்ட் அபுவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்தது. வாகனங்கள், புல்வெளிகள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன.

இதேபோன்று, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags: Jammu and KashmirHeavy snowfallNorth IndiaChandigarh acold wave warningsWinterdelhiRajasthanHaryanaindia meteorological department
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் vs தலிபான் போர்! : இந்தியாவுக்கு லாபமா?

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies