நடிகர் தனுஷ் நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு நபர் 5 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நயன்தாரா பற்றிய ஆவணப்படத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் அவர் நடித்த படங்களின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தின் காட்சிகள் அனுமதியின்றி பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் இதனால் அந்த படத்தின் உரிமம் உள்ளவர் 5 கோடி ரூபாய் கேட்டு நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.