128 வயது துறவி சிவானந்தா பாபா : அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

128 வயது துறவி சிவானந்தா பாபா : அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம் – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 17, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 100 ஆண்டுகளாக பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைன் மற்றும் ஹரித்வார் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் கலந்து கொள்கிறார் ஒருவர் என்றால் ஆச்சரியமாக உள்ளது இல்லையா ? அவர் தான் 128 வயதான சுவாமி சிவானந்த பாபா. அந்த அற்புதமான இந்து மத துறவியைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவாமி சிவானந்தா பாபா 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவில் பெங்கால் மாகாணத்தின் சில்ஹெட் மாவட்டத்தில், ஒரு பிரபலமான பெங்காலி பிராமண கோஸ்வாமி குடும்பத்தில் பிறந்தார். அவ்வூரில் வாழ்ந்த பெரிய துறவியான தாகுர்பானியின் 10வது வழித்தோன்றல் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

வைஷ்ணவர்களான பாபாவின் தந்தை ஸ்ரீநாத் கோஸ்வாமி மற்றும் தாயார் பகபதி தேவி தங்களின் வாழ்வாதாரத்துக்காக வீடு வீடாக பிச்சை எடுப்பார்கள். பிரசாதமாக பிச்சை பெற்ற உணவை முதலில் ஸ்ரீமன் நாராயணனுக்குப் படைத்தது போக, மிச்சம் அவர்களின் பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், தங்களின் 4 வயதான மகனான சிவானந்தாவை, மேற்கு வங்கத்தில் ( Nabadwip) நபத்விப் நகரில் வசித்து வந்த வைஷ்ணவ துறவியான ஓம்காரானந்த கோஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓம்காரானந்த கோஸ்வாமிஜியால் சிவானந்தா தனது பெற்றோரைச் சந்திக்க சில்ஹெட்டுக்கு அனுப்பிவைக்கப் பட்டார்.

சிவானந்தா தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​தனது மூத்த சகோதரி ஏற்கனவே பசி மற்றும் பட்டினியால் இறந்துவிட்டதை அறிந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது தாயார் மற்றும் தந்தையார் இருவரும் ஒரே நாளில் இறந்தனர். பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த சிவானந்தா, தனது குருவின் ஆசிரமத்துக்குத் திரும்பினார். சிவானந்தா தனது குரு நாதரிடம் “மந்திர தீட்சை” பெற்று, யோகா பயிற்சி மற்றும் ஆன்மீகப் பயிற்சி இரண்டிலுமே தேர்ச்சி பெற்றார்.

தனது முழு வாழ்க்கையையும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும், கடவுளின் பெயரின் மகிழ்ச்சிக்காகவும், மனிதகுலத்தின் சேவைகளுக்காகவும் சுவாமி சிவானந்தா அர்ப்பணித்தார்.

1925ம் ஆண்டு, குருஜியால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட சுவாமி சிவானந்த பாபாஜி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6-கண்டங்கள் முழுவதும் பயணித்தார். சென்ற இடமெல்லாம் இந்துமதம் கற்று தரும் வாழ்க்கைக் கலையை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தனது குருஜியின் அழைப்பின் பெயரில் 1959ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஓம்காரானந்த கோஸ்வாமிஜி மறைவுக்குப் பின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார்.

குறிப்பாக வடகிழக்கு இந்திய மாநிலங்களில் வாழும் இந்திய மக்களுக்கு தன்னலமற்ற சேவையைச் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளாக, பூரி, பங்குரா, பிஷ்ணுபூர், கர்பேட்டா, புருலியா மற்றும் வாரணாசி, நபத்விப், பிர்பூம், பழங்குடியினர் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான தொழுநோயால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அயராது சேவை செய்து வருகிறார்.

1979ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக வாரணாசியில் சுவாமி சிவானந்த பாபாஜி வசித்து வருகிறார். மிக எளிமையான வாழ்வை மேற்கொள்ளும் சுவாமி சிவானந்த பாபாஜி, எந்த விதமான நன்கொடையையும் யாரிடமும் ஏற்பதில்லை. சீடர்கள் தங்கள் குருவின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

128 வயதிலும், சுவாமி சிவானந்த பாபாஜி, தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் யோகா, பிராணாயாமம், மற்றும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்கிறார். பிறகு, நாள் முழுவதும் ஜபம், தியானம், பூஜை ஆகியவற்றில் தன் நேரத்தை அர்ப்பணிப்புடன் செலவழிக்கிறார். ஒருநாளும் பகலில் தூங்காத சுவாமி சிவானந்த பாபாஜி, தன்னை நாடி வருபவர்களுக்கு உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வை அடைய வழி காட்டுகிறார்.

இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்த சுவாமி சிவானந்த பாபாஜி, வேகவைத்த காய்கறிகளுடன் அரிசி,மற்றும் ரொட்டியை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக, பால் அல்லது பழம் சாப்பிடுவதில்லை. தினமும் இரவு 9 மணிக்கு சுவாமி சிவானந்த பாபாஜி உறங்கச் செல்கிறார்.

2019ம் ஆண்டு பெங்களூரு காந்திரபா ஸ்டேடியத்தில் நடந்த உலக யோகா தின கொண்டாட்டத்தில் யோகாவை செய்து காட்டி, அனைவரையும் சுவாமி சிவானந்த பாபாஜி அசத்தினார். கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட மிக வயதான இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார். யோகா மற்றும் மனித சமுதாயத்தின் மீது கருணை காட்டும் பணிக்காக, 2022ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவின் சொல்லப்படாத கதைகளின் 1000 திரைப்பட பயணத் தொடரில், சுவாமி சிவானந்த பாபாஜியை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நேர்காணல் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 100 ஆண்டுகளில் Prayagraj, Nashik, Ujjain and Haridwar ஆகிய இடங்களில் நடைபெற்ற கும்பமேளாவி பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

மகிழ்ச்சியான அன்றாட வாழ்க்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடவுளுக்கு ஒப்புவித்த சரணாகதி மற்றும் மனிதகுலத்துக்கான சேவை இவற்றின் பிம்பமாக சிவானந்த பாபாஜி வாழ்ந்து வருகிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியது போல், பாபா சிவானந்தாவின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் என்பதில் ஐயமில்லை.

Tags: Kumbh MelaSwami Sivananda Baba.128-year-old Swami Sivananda Baba.ujjainNashikPrayagraj
ShareTweetSendShare
Previous Post

மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் – நிர்வாக இயக்குநர் ஆய்வு!

Next Post

பொங்கல் பண்டிகை – சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies