அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி - சாதகமாக்க துடிக்கும் இந்தியா!
Aug 16, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரையும் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடி உத்தரவுகள், இந்தியாவைப் பாதிக்குமா ? ட்ரம்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

47வது அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவீத வரியையும் , கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியையும் விதிப்பதாக தெரிவித்திருக்கிறார். ( BRICS ) பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியில் வர்த்தகம் செய்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கனடா, மெக்சிகோ நாடுகளுக்கான 25 சதவீத வரிவிதிப்பு, வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. மேலும், சீனா மீதான வரிவிதிப்பை, இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு பிறகு இந்தியா மீதான வரி விதிப்பையும் ட்ரம்ப் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

அமெரிக்காவுடனான வர்த்தக உபரி கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 9.8 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது.

குறிப்பாக, இயந்திரங்கள், மருந்துகள், மின்னணுவியல் மற்றும் செமி கண்டக்டர் போன்ற துறைகளில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் மிக பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்கும் பட்சத்தில் அது இரு தரப்பு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரியைக் குறைக்க, ட்ரம்ப் அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள பிரதமர் மோடி அரசு தயாராகவே இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து விஸ்கி போன்ற மது வகைகள், எஃகு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்கவும் இந்தியா திட்டமிட்டுளளதாக தெரிய வருகிறது.

கூடுதலாக,சோயாபீன்ஸ், பால் பொருட்கள், வாகனங்கள், மருத்துவ கருவிகள், விமானங்கள் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இந்தியா வாங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்காவுடன் ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய 18 ஆயிரம் பேரை இந்தியா திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளது. இது, ட்ரம்ப் அரசைச் சமாதானப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்படுகிறது.

அடுத்த 100 நாட்களுக்குள் சீனாவுக்கு செல்ல விரும்புவதாக தனது அதிகாரிகளிடம் அதிபர் ட்ரம்ப், தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்தது, சீன செயலியான டிக் டாக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முடிவை தள்ளி வைத்தது, இவை எல்லாம், சீனா மீதான அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது , அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் வரிகளின் அரசன் இந்தியா என்றும் கடுமையாக ட்ரம்ப் விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக, தனது முதல் ஆட்சிக் காலத்தில், 2018ம் ஆண்டு, இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் போன்ற பொருட்களுக்கு அதிக வரி விதித்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

உடனே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் ஆப்பிள், வால்நட் போன்ற 26 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆன வர்த்தகப் போட்டியைத் தனக்கு சாதகமாக மாற்ற இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, ட்ரம்ப் நிர்வாகத்துடன் மோதும் போக்கை இந்தியா கடைபிடிக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags: donald trump 2025America's trade warA tight grip on China India is scrambling to take advantagePM ModichinausaIndian
Share
Tweet
SendShare
Previous Post

திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது – வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!

Next Post

கூடலூர் அருகே கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்!

Related News

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies