சிபிஐ விசாரணை கோரி வேங்கை வயலில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ விசாரணை கோரி வேங்கை வயலில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி அப்பகுதி மக்கள், 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், கடந்த 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேங்கைவயலில் பட்டியலினத்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 4வது நாளாக கையில் கருப்புக் கொடியை ஏந்தி, வாயில் கருப்பு துணிக்கட்டி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில், ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, சுதர்சன் , முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் காவலர் முரளி ராஜா கடந்த 20ஆம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும், விடுப்பு கேட்டு விண்ணபிக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: vengaivayal problemvengaivasalvengavayal casepudukottai vengaivayal casevengaivayal case | cbcid policepudukottai vengaivayal case newsvengavayal case newsVengaivayal.vengavayal case updatevengaivayal issueVENGAIVAYAL 4TH DAY PROTESTVengaivayal case.pudukottai vengaivayal dalit water tank issue
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை : ரேசன் அட்டை, வீடு கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

Next Post

எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies