வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!
Apr 29, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேங்கை வயல் வழக்கு : தமிழக அரசு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கை வயல் விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு பின்னர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விளக்கமளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் துரிதமாக விசாரணை நடத்தவும், இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 389 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மொபைல் போன்களில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், வேங்கை வயல் பகுதியை சுற்றி இருக்கும் 87 தொலைத் தொடர்பு கோபுரங்களில் தொலைப்பேசி அழைப்புகள் ஆய்வு செய்து புள்ளி விவரம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் அசுத்தம் செய்தது, இரண்டு பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்றும் வாதாடினார்.

மேலும் வழக்கில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறியதை அடுத்து, மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: pudukottai vengaivayal dalit water tank issuevengaivayal issue in tamilpudukkottai vengaivayal dalit water tank issuevengaivayal issue madan gowrivengaivasal issue in tamilvengaivayal dalits targettedvengaivayal newsvengaivayal problempudukkottai vengaivayalVengaivayal.vengavayal casevengaivayal issuevengavayalVengaivayal case.vengaivasal newsvengaivasal issueVengai field case: Tamil Nadu government explanation!pudukkottai vengaivayal water tank issuevengaivasal issue in tamil madan gowri
ShareTweetSendShare
Previous Post

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

Next Post

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies