நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு - உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!
Jun 11, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 7, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் அனுமதி அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒருமுறை ஆளுநர் நிராகரித்த மசோதாவை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அந்த மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும் என்றும்,
தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோருவதாகவும் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி? என்று கேட்டதுடன், அதற்கு அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? என்றும் வினவினர்.
அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் தனக்கு வேண்டியபடி ஆளுநர் சுயமாக முடிவு எடுத்துள்ளதாக பதிலளித்தார்.

எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை ஆளுநர் ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை விளக்க வேண்டும் என்றுகூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: Justices J.P. Parthiwalasupreme courtGovernor R.N.Ravitamil nadu governmentindirect legalisation of the bills through the courts.
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி

Next Post

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies